Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, என்னில் ஒரு தூய உள்ளத்தை உண்டாக்குவீராக. என் நம்பிக்கையே! என்னுள் ஒரு சாந்தமான மனசாட்சியைப் புதுப்பிப்பீராக. என் அதி நேசரே! சக்தியின் ஆவியின் வழி உமது மார்க்கத்தில் என்னை உறுதிப்படுத்துவீராக. எனது ஆவலின் நோக்கமே! உமது ஒளியின் பிரகாசத்தின் வழி எனக்கு உமது வழியை வெளிப்படுத்துவீராக. என் உயிரின் பிறப்பிடமே, உமது உன்னத சக்தியால், என்னை உமது புனிதத் தெய்வீகத் தன்மைக்கு உயர்த்துவீராக. என் இறைவன் ஆனவரே! உமது நித்தியம் எனும் தென்றலினால் என்னை மகிழ்விப்பீராக. என் தோழரே, உமது நித்திய கானங்கள் என் மீது அமைதியை ஊதி அருளுமாக, என் பிரபுவே, உமது ஆதி வதனத்தின் செல்வங்கள் என்னை உம்மைத் தவிர மற்றெல்லா- வற்றிலிருந்தும் மீட்டருளுமாக; தெளிவான-வற்றுள் எல்லாம் அதி தெளிவானவரே, மறைவாய் உள்ளவற்றுள் எல்லாம் அதி மறைவாய் உள்ளவரே! உமது மாசுபடுத்திட இயலா வெளிப்படுத்துதலின் செய்திகள் எனக்கு மகிழ்ச்சி கொண்டு வருமாக.
- Bahá'u'lláh