Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் போற்றப்டுவதாக! உமது மென்கருணை எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டும், உமது வள்ளன்மை எனும் அங்கியினைப் பற்றிக்கொண்டுமுள்ள உமது ஊழியன் நானே. அருவமும், உருவமுமான, எல்லாப் படைப்புப் பொருள்களையும் நீர் வசப்படுத்தி, எதன் மூலமாக உயிர் மூச்சாகவே இருக்கும் சுவாசமானது, படைப்பு முழுவதன் மீதும் வீசப்பட்டுள்ளதோ, அந்த உமது திருநாமத்தினால்; விண்ணுலகங்களையும் பூமியையும் சூழ்ந்துள்ள உமது சக்தியைக் கொண்டு என்னைப் பலப்படுத்துமாறும், எல்லா நோய்களிலிருந்தும், பேரிடர்களிலிருந்தும் என்னைக் காத்தருளுமாறும் நான் உம்மிடம் மன்றாடுகிறேன். எல்லா நாமங்களுக்கும் நீரே பிரபு என்றும், உமக்கு விருப்பமான எல்லாவற்றையும் விதித்திடுபவர் நீரே என்றும் நான் சாட்சியம் அளிக்கின்றேன். வல்லவரும், எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.
என் பிரபுவே, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மை பயப்பனவற்றை எனக்கு விதித்தருள்வீராக. ஆகையால், பழி சுமத்துவோனின் பழிப்போ, நாஸ்திகனின் இரைச்சலோ, உம்மிடமிருந்து விலகிச் சென்றோரின் பேதமோ, உந்தன்பால் திரும்புவதிலிருந்து தடுத்திடா-தோரான உமது உயிரினங்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கென நீர் எழுதியுள்ள-வற்றை எனக்கும் வழங்கிடுவீராக.
உண்மையாகவே, உமது அரசாட்சி எனும் சக்தியைக் கொண்டு ஆபத்தில் உதவுபவர் நீரே ஆவீர். வல்லவரும், அதி சக்திமிக்கவருமான, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
- Bahá'u'lláh