Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, வள்ளன்மை, கருணை, ஆகியவற்றின் கடவுளே! எவரது கட்டளையிடும் வார்த்தையின் வாயிலாகப் படைப்பு முழுமையும் உருவாக்கப்பட்டதோ, அவ்வார்த்தையின் மன்னர் நீரே ஆவீர்; எவரது ஊழியர்களின் செயல்கள், தம் கிருபையைக் காட்டுவதிலிருந்து அவரை என்றுமே தடுத்ததில்லையோ, தம் அருட்கொடையின் வெளிப்பாடுகளைத் தடை செய்ததில்லையோ, அவற்றின் சர்வ வள்ளன்மை மிக்கவர் நீரே ஆவீர்.
உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும், அவனது மீட்புக்குக் காரணமாக இருந்துள்ளவற்றை இவ்வூழியனை அடையச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே, வல்லவரும், அதி சக்திமிக்கவரும், சகலத்தையும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.
- Bahá'u'lláh