Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே எனதாண்டவரே, நீர் மகிமைப்படுத்தப்-படுவீராக! உமது நாள்களில் என்னை உருவாக்கி, உமது அன்பையும் அறிவையும் என்னுள் உட்புகுத்தியமைக்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். உம்முடன் அணுக்கமாக இருக்கும் உமது ஊழியர்களின் உள்ளங்களெனும் பொக்கிஷங்களிலிருந்து, உமது விவேகம், சொற்கள் ஆகிய நல்முத்துகள் வெளிக்கொணரப்பட்ட உமது நாமத்தின் பேராலும், இரக்கமுடையவர் எனும் உமது நாமமெனும் பகல் நட்சத்திரத்தின் மூலமாக, உமது சுவர்க்கம், உமது பூமி ஆகிய அனைத்தின் மீதும் அதன் பிரகாசத்தைப் பொழிந்திட்ட அந்நாமத்தினாலும், உமது கிருபை, கொடை ஆகியவற்றின் பேராலும், உமது அற்புதமான-வையும், மறைவாய் உள்ளவையும் அருட்கொடை-களைத் தந்தருளுமாறு நான் உம்மிடம் இறைஞ்சுகின்றேன்.
என் கடவுளே, உமது சொந்த நாள்களோடு நீர் இணைத்துள்ள என் வாழ்வின் ஆரம்ப நாள்கள் இவையே. நீர் என் மீது அத்துணைப் பெரும் மதிப்பை இப்போது பொழிந்துள்ள காரணத்தால், உமது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை எனக்கும் தரமறுத்து விடாதீர்.
என் கடவுளே, உமது அன்பெனும் நிலத்தில் விதைத்தும், உமது கொடை எனும் கரத்தினால் துளிர்விடச் செய்துமுள்ள ஒரு சிறு வித்துதான் நான். எனவே, இவ்வித்து, அதன் மன ஆழத்தில், உமது கருணை எனும் நீர்களுக்காகவும், உமது கிருபை எனும் உயிரூற்றுக்காகவும் ஏங்குகிறது. உமதன்புக் கருணை எனும் சுவர்க்கத்திலிருந்து, உமது நிழலின் கீழும், உமது அரசவையின் எல்லைகளுக்குள்ளும் அது செழுமையாகிட உதவக்கூடியவற்றை, அதன் மீது பொழிந்திடுவீராக. உமது நிறைவான ஓடையிலிருந்தும், உந்தன் உயிர் நீர் எனும் ஊற்றுக்களிலிருந்தும், உம்மை கண்டுணர்ந்த அனைவரின் இதயங்களிலும் நீர் பாய்ச்சுபவர் நீரே ஆவீர்.
உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவன் போற்றப்படுவாராக.
- Bahá'u'lláh