Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே! என் கடவுளே! உமது ஒருமையினை ஒப்புக்கொண்டமைக்காக என்னை உறுதிப்படுத்தி, உமது தனித்தன்மையான சொல்லின்பால் என்னை ஈர்த்து, உமது அன்பெனும் நெருப்பினால் என்னைத் தூண்டி, உம்மை குறித்துரைப்பதிலும், உமது அன்பர்கள், பணிப்பெண்கள் ஆகியோரின் சேவையில் ஈடுபடுத்தியமைக்காகவும், புகழ் உமக்கே உரித்தாகுக.
என் பிரபுவே, அடக்கமானவனாகவும், கர்வமற்ற-வனாகவும் இருந்திட எனக்கு உதவிடுவீராக; அனைத்திலிருந்தும் நான் பற்றறுத்திடவும், உமது மகிமை எனும் அங்கியின் விளிம்பைப் பற்றிக்கொள்ளவும் எனக்குப் பலமளிப்பீராக; அதனால், எனதுள்ளம், உமது அன்பினால் நிரப்பப்பட்டு, உலகம், அதன் பண்புகள் மீதான பற்றுகள் ஆகியவற்றின்பாலான அன்பு எதற்கும் இடந்தராதிருக்கக் கூடும்.
கடவுளே! உம்மைத் தவிர மற்றெல்லா-வற்றிலிருந்தும் என்னைப் புனிதப்- படுத்துவீராக; பாவங்கள், அத்துமீறல்கள் ஆகியவற்றின் மாசுகளிலிருந்து என்னை முற்றிலும் தூய்மைப் படுத்துவீராக; என்னை ஓர் ஆன்மீக உள்ளத்தையும், மனசாட்சியையும் பெற்றிடச் செய்வீராக.
மெய்யாகவே, எல்லா மனிதர்களாலும் உதவிக்காக நாடிடப்படுபவரான கருணைமிக்கவர் நீரே ஆவீர்; மெய்யாகவே, அதி தாராளமானவர் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá