Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே! என் கடவுளே! உமது இவ்வூழியன், உம்மை நோக்கி முன்னேறி வந்துள்ளான்; உமது அன்பெனும் பாலைவனத்தில் அலைந்து திரிகின்றான்; உமது சேவை எனும் பாதையில் நடந்து செல்கின்றான்; உமது ஆதரவை எதிர்ப்பார்க்கின்றான், உமது அருட்கொடையை நம்பி இருக்கின்றான்; உமது இராஜ்யத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளான்; உமது பரிசு என்னும் மதுரசத்தால் மதிமயங்கியுள்ளான். என் கடவுளே, உம்மீதுள்ள அவனது நேசம் எனும் உணர்வெழுச்சியையும், உம்மைப் போற்றும் அவனது சீர்மையையும், உம்மீதான அவனது அன்பின் ஆர்வத்தையும் அதிகரிப்பீராக.
மெய்யாகவே, அதி தாராளமானவரும், பொங்கிவழிந்திடும் அருள்நிறை பிரபுவும் நீரே. மன்னிப்பவரும், கருணைமிக்கவருமான கடவுள், உம்மையன்றி வேறிலர்.
- `Abdu'l-Bahá