Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே! உந்தன்பால் ஈர்க்கப்பட்டு, உமது முன்னிலையை அணுகியுள்ள இவன், உமது பிரகாசமிகு ஊழியனும், உமது ஆன்மீக அடிமையும் ஆவான். அதி வள்ளன்மைமிக்கப் பிரபுவே, இவன் உமது வதனத்தை நோக்கித் திரும்பியுள்ளான், உமது ஒருமையை அங்கீகரித்தும், உமது தனித்துவத்தை ஒப்புக்கொண்டும், நாடுகளுக்கிடையே உமது நாமத்தின் பேரில் குரல் எழுப்பிடும், உமது கருணை எனும் வழிந்தோடும் நீர்களின்பால் மக்களை வழிநடத்தியுமுள்ளான். கேட்போருக்கு, உமது அளவிடற்கரிய கிருபை எனும் மதுரசத்தினைப் பொங்கி வழிந்திடும் கிண்ணத்திலிருந்து பருகிடச் செய்துள்ளான்.
பிரபுவே, எல்லாச் சூழல்களிலும் அவனுக்கு உதவிடுவீராக; நன்கு பாதுகாக்கப்பட்ட உமது மர்மங்களை அவன் கற்றுக்கொள்ளச் செய்திடு-வீராக; உமது மறைக்கப்பட்ட முத்துகளை அவன் மீது பொழிந்திடுவீராக. உமது தெய்வீக உதவி எனும் காற்றினால், கோட்டை உச்சிகளில் பறந்திடுகின்ற ஒரு பதாகையாக அவனை ஆக்கிடுவீராக; தெளிவான நீருடைய ஓர் ஊற்றாக அவனை ஆக்கிடுவீராக.
மன்னித்தருளும் என் பிரபுவே! எங்கும் ஒளிவீசிடும் ஒரு விளக்கின் கதிர்களைக் கொண்டு உள்ளங்களை ஒளிர்ந்திடச் செய்து, நீர் தாராளமாகச் சலுகை வழங்கியுள்ள உமது மக்கள் மத்தியில், யாவற்றின் மெய்ம்மைகளையும் வெளிப்படுத்து-வீராக.
மெய்யாகவே, வலிமைமிக்கவரும், சக்தி-மிக்கவரும், பாதுகாப்பவரும், பலமானவரும், கொடையாளரும் நீரே ஆவீர்! மெய்யாகவே, கருணையனைத்திற்கும் பிரபு நீரே ஆவீர்!
- `Abdu'l-Bahá