Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே! இவர்கள் உமது வலுவற்ற ஊழியர்கள்; உமது மேன்மைமிகு சொற்களுக்குச் சிரந்தாழ்த்தி, உமது ஒளி எனும் திருவாசலில் தங்களையே தாழ்த்திக் கொண்டும், எதன் மூலமாக நண்பகல் பேரொளியில் பகலவன் பிரகாசிக்கச் செய்யப்பட்டுள்ளதோ, அந்த உமது ஒருமைக்குச் சாட்சியமளித்திடும் உந்தன் விசுவாசமிக்க அடிமைகளும், பணிப்பெண்களும் ஆவர். நீர் உமது மறைவான இராஜ்யத்திலிருந்து வெளிப்படுத்திய ஆணைகளுக்கு இவர்கள் செவிசாய்த்தும், அன்பினாலும் பரவசத்தாலும் துடிப்புறும் இதயங்களுடன், அவர்கள் உமது அழைப்புக்கு மறுமொழியளித்துள்ளனர்.
பிரபுவே, உமது கருணைமிகு பொழிவுகள் அனைத்தையும் அவர்கள் மீது பொழிவீராக; உமது கிருபை எனும் நீர்கள் அனைத்தையும் அவர்கள் மீது பொழிந்திடச் செய்திடுவீராக.
சுவர்க்கம் எனும் தோட்டத்தில் அழகிய செடிகளாக அவர்களை வளரச்செய்திடுவீராக; உமது வழங்குதல் எனும் முழுமையாக, நிறைந்து வழிந்திடும் மேகங்களிலிருந்தும், உமது தாராள கிருபை எனும் ஆழமான குளங்களிலிருந்தும், இத்தோட்டத்தை மலர்ந்திடச் செய்வதோடு, அதை என்றும் பசுமையாகவும், செழிப்பாகவும், என்றும் புதிதாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் ஆக்கிடுவீராக.
மெய்யாகவே, வலிமையானவரும், மேன்மை-மிக்கவரும், சக்தியுடையவரும் நீரே ஆவீர்; விண்ணிலும் மண்ணிலும் மாறாது நிலைத்திருக்கும், தனியொருவர் நீரே. வெளிப்-படையான சான்றுகளுக்கும், அடையாளங்-களுக்கும் பிரபுவான உம்மையன்றி வேறு கடவுள் இலர்.
- `Abdu'l-Bahá