Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, என் பிரபுவே, எனதாவலின் எல்லையே, இந்த உமது ஊழியன் உமது கருணையெனும் புகலிடத்தில் உறங்கி, உமது தயை என்னும் நிழலில் இளைப்பாற விரும்பி, உமது கண்காணிப்பையும் பாதுகாப்பையும் வேண்டுகின்றான்.
என் பிரபுவே, உம்மையன்றி வேறெதனையும் நான் கண்ணுறாதிருக்க, என்றும் அயரா உமது கண்களைக் கொண்டு என் விழிகளைப் பாதுகாக்குமாறு உம்மை மன்றாடிக் கேட்கின்றேன். உமது அடையாளங்களை உணர்ந்து கொள்ளவும் உமது வெளிப்பாட்டின் எல்லையைக் கண்ணுறவும் எனது பார்வைக்குச் சக்தியருள்வீராக. உமது சர்வ வல்லமையின் வெளிப்படுத்துதல்கள் முன்னால் சக்தியின் சிகரமே நடுங்கியது.
எல்லாம் வல்ல, அனைத்தையும் ஆட்கொண்டிடும், நிபந்தனைக்கு உட்படாத இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்!
- Bahá'u'lláh