Return to BahaiPrayers.net
Facebook
இறைவா, என் இறைவா, உம்மைப் பிரிந்ததன் காரணமாக உமக்காக ஏங்கிடுவோரின் கண்கள் விழித்திருக்கும் போது, எங்ஙனம் நான் மட்டும் துயில் கொள்ள இயலும்? உம் முன்னிலையிலிருந்து தூரத்தில் இருப்பதனால் உமது அன்பர்களின் ஆன்மாக்கள் அலைக்கழித்்து வருந்துகையில் நான் மட்டும் எங்ஙனம் படுத்து ஓய்வு எடுத்திட இயலும்?
என் பிரபுவே, என் ஆன்மாவையும் என்னையும் முழுமையாக உமது வலிமை, பாதுகாப்பு என்னும் வலக்கரத்தினில் ஒப்படைத்துள்ளேன். உமது சக்தியின் மூலமே நான் தலையணையின் மீது சிரம் சாய்த்துப் பின் உமது சித்தத்திற்கும், நல்விருப்பத்திற்கும் ஏற்ப அதனை நிமிர்த்தியுள்ளேன். உண்மையாகவே நீரே காப்பவர், பேணுபவர், சர்வ வல்லவர், அதி சக்தி வாய்ந்தவர்.
உமது வலிமை சாட்சியாக! தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும், நான், நீர் விரும்புவதைத் தவிர வேறெதனையும் கோருவதில்லை. நான் உமது ஊழியன், உமது கரங்களில் இருக்கின்றேன். உமது நல்விருப்பம் எனும் நறுமணத்தினைப் பரவச் செய்யக்கூடியதனைச் செய்திட அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவீராக. உண்மையாகவே, இதுவே எனது நம்பிக்கையும் உமதருகில் மகிழ்வுறும் பேறு பெற்றோரின் நம்பிக்கையும் ஆகும். உலகங்களுக்கெல்லாம் பிரபுவானவரே, நீர் புகழப்படுவீராக.
- Bahá'u'lláh