Return to BahaiPrayers.net
Facebook
உண்மையைத் தேடுபவரே! கடவுள் உமது கண்ணைத் திறந்திட நீர் விரும்பினால், பின்வருமாறு கூறி, கடவுளிடம் இறைஞ்சி, நள்ளிரவில் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
பிரபுவே, நான் உமது ஒருமைத் தன்மை என்னும் இராஜ்யத்தின்பால் எனது முகத்தினைத் திருப்பி, உமது கருணைக் கடலில் மூழ்கியுள்ளேன். பிரபுவே, இருள் மிகுந்த இவ்விரவில் உமது தீபங்களைக் காண்பதன் வழி எனது பார்வையை ஒளிரச் செய்வீராக. அற்புதமிக்க இக்காலத்தில், உமது அன்பெனும் பழரசத்தால் என்னை மகிழ்வுறச் செய்வீராக. பிரபுவே, என்னை உமது அழைப்பினைச் செவிமடுக்கச் செய்வீராக. உமது சுவர்க்கத்தின் கதவுகளை எனது கண்முன் திறப்பீராக; அதனால் நான் உமது ஒளியைக் கண்ணுற்று உமது பேரழகின்பால் ஈர்க்கப்படக் கூடும்.
மெய்யாகவே,நீரே வழங்குபவர், தயாளமானவர்், கருணைமிக்கவர், மன்னித்தருள்பவர்.
- `Abdu'l-Bahá