Return to BahaiPrayers.net
Facebook
கருணையுள்ள பிரபுவே! இந்த இளம் பறவைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஜோடி விண்ணுலக சிறகுகளைத் தந்தருளியும், அவைகளுக்கு ஆன்மீகச் சக்தியையும் வழங்கிடுவீராக; அதனால் அவை இந்த எல்லையில்லா வானில் சிறகடித்துத்திரியவும், அப்ஹா இராஜ்யத்தின் சிகரங்களுக்கு உயரப் பறந்திடவும் கூடும்.
பிரபுவே, இந்த வலுவற்ற விதைகளைப் பலப்படுதுவீராக; அதனால் அவை ஒவ்வொன்றும், பசுமையும், செழிப்பும் நிறைந்த கனிக்கொடுக்கின்ற ஒரு மரமாக ஆகிடக் கூடும். உமது விண்ணுலகச் சேனைகளின் சக்தியைக் கொண்டு, இந்த ஆன்மாக்களை வெற்றியாளராக்கிடுவீராக; அதனால் அவர்கள் பிழை, அறியாமை எனும் சக்திகளை வென்று, தோழமை, வழிகாட்டல் எனும் விருதுக்கொடியை மக்களிடையே உயர்த்திக் காட்டிடக் கூடும்; அதனால் அவர்கள், வசந்த காலத்தின் புத்துயிரூட்டும் சுவாசங்களைப் போல், மனித ஆன்மாக்கள் எனும் விருட்சங்களைப் புதுப்பித்துப் புத்துயிரூட்டவும் கூடும்; இளவேனிற் காலத்தின் பொழிவுகளைப் போல, அந்தப் பிரதேசங்களின் புல்வெளிகளைப் பசுமையாகவும் வளமாகவும் ஆக்கிடக் கூடும்.
வலிமையும் சக்தியும் மிக்கவர் நீரே; வழங்குபவரும் சர்வ அன்பானவரும் நீரே.
- `Abdu'l-Bahá