Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே! இவ்விளைஞனைப் பிரகாசமுறச் செய்து, இவ்வறிய ஜீவனுக்கு உமது வளத்தினை வழங்கிடுவீராக. அவனுக்கு அறிவை வழங்கி, ஒவ்வொரு காலைப் பொழுதிலும் அவனுக்குக் கூடுதலான பலமளித்து, அவனை உமது பாதுகாப்பு எனும் புகலிடத்தினுள் காத்திடுவீராக. அதனால் அவன் தவறிலிருந்து விடுவிக்கப்பட்டு, உமது சமயச் சேவையில் தன்னை அர்ப்பணித்து, வழி தவறியவர்களுக்கும் துரதிர்ஷ்டனுக்கும் வழிகாட்டிடக் கூடும்; கட்டுண்டிருப்பவர்களை விடுவிக்கக் கூடும்; கவனமற்றோரை விழிப்புறச் செய்யக் கூடும்; அதனால் யாவருக்கும் உமது நினைவும் போற்றுதலும் அருளப் பெறுமாக. வல்லவரும் சக்தி மிக்கவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá