Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே எனதாண்டவரே, ஒளி உமக்கே உரியதாகுக! என்றும் நிலையான உமது அரசாட்சியின் சக்தி வாயிலாக, நீர் உயர்வுபெறச் செய்துள்ளவரைத் தாழ்வுறச் செய்திடாதீர்; உமது நித்தியம் எனும் கூடாரத்திற்குள் நுழைந்திடச் செய்தவரை உம்மிடமிருந்து நீர் வெகுதூரம் விலகிடச் செய்திடாதீர். என் கடவுளே, உமது ஆதிக்கத்தைக் கொண்டு மேலுயர்ந்து நிற்கச் செய்திட்டவரை, நீர் துரத்திவிடப் போகின்றீரா? என் ஆவலானவரே, நீரே ஒரு புகலிடமாக இருந்திட்ட ஒருவரை, உம்மிடமிருந்து புறக்கணிக்கப் போகின்றீரா? நீர் மேன்மையுறச் செய்தவரை, நீரே தரமிழக்கச் செய்திட இயலுமா, அல்லது உம்மை நினைவுகூர்ந்திட நீர் இயலச் செய்தவரை உம்மால் மறந்திட இயலுமா?
மகிமை பொருந்தியவர், அளவற்ற மகிமை பொருந்தியவர் நீரே! நித்திய காலமும் படைப்பு முழுவதன் அரசரும், அதன் முதன்மை இயக்குபவருமானவர் நீரே ஆவீர்; நித்திய காலமும் எல்லாப் படைப்புப் பொருள்களின் பிரபுவாகவும், அவற்றின் ஆணையாளராகவும் நீரே நிலைத்திருப்பீர். என் கடவுளே, மகிமை பொருந்தியவர் நீரே ஆவீர்! உமது ஊழியர்களிடம் கருணைக் காட்டுவதை நீர் நிறுத்திக்கொண்டால், அவர்களிடம் கருணைக் காட்டுபவர்தான் யார்; உமது அன்புக்குரியவர்களை நீர் ஆதரிக்க மறுத்துவிட்டால், அவர்களுக்கு ஆதரவளிக்கக் கூடியவர்தான் யார்?
மகிமை பொருந்தியவர், அளவற்ற மகிமைப் பொருந்தியவர் நீரே! உமது உண்மைநிலையில் நீர் ஆராதனைக்குரியவர்; மெய்யாகவே, உம்மைத்தான் நாங்கள் அனைவரும் வழிபடுகிறோம்; உமது நீதியில் வெளிப்படையானவர் நீரே ஆவீர், உம்மிடமே, மெய்யாகவே, நாங்கள் அனைவரும் சாட்சியம் பகர்கின்றோம். மெய்யாகவே, உமது அருள்பாலிப்பில் அன்புக்குரியவர் நீரே ஆவீர். ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் உம்மையன்றி வேறு கடவுள் இலர்.
- Bahá'u'lláh