Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே! குற்றங்களை மன்னிப்பவரே! சன்மானங்கள் வழங்குபவரே! வேதனைகளைப் போக்குபவரே!
மெய்யாகவே, தூல உடலைத் துறந்து ஆன்மீக உலகினை வந்தடைந்தோரின் பாவங்களை மன்னிக்குமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். என் பிரபுவே! அவர்களைக் குற்றங்களிலிருந்து தூய்மைப்படுத்துவீராக; அவர்களின் கவலைகளை அகற்றிடுவீராக; அவர்களது இருளை ஒளியாக மாற்றுவீராக. அவர்களைப் பேரின்பமெனும் பூங்காவில் பிரவேசிக்கச் செய்வீராக; அதி தூய நீரினால் அவர்களைச் சுத்தப்படுத்தி, அதி உயர்வான மலையின் மீதுள்ள உமது சுடரொளியினைக் கண்ணுற அனுமதிப்பீராக.
- `Abdu'l-Bahá