Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே! என் கடவுளே! உமது தெய்வீக அதிகாரத்தின் மாட்சிமையின் முன் பணிவுடனும் தாழ்மையுடனும் உமது ஒருமைத் தன்மையின் கதவருகில் நிற்கும் உமது ஊழியர் மெய்யாகவே உம்மிலும் உமது வாசகங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது வார்த்தைகளுக்குச் சாட்சியமளித்து உமது அன்பெனும் தீச் சுடரினால் தூண்டப்பட்டு உமது அறிவெனும் சமுத்திரத்தின் ஆழத்தில் மூழ்கி உமது தென்றலினால் கவரப்பட்டு, உம் ஒருவரையே நம்பி, தனது முகத்தை உந்தன்பால் திருப்பி, தனது மன்றாடலை உந்தன்பால் சமர்ப்பித்து, உமது மன்னிப்பையும், பொறுத்தருள்-தலையும் உறுதியாய் நம்பி இருக்கின்றார். அழியக்கூடிய இவ் வாழ்க்கைதனைத் துறந்து உம்மைச் சந்திக்கும் ஆவலில் ஏங்கி, நித்திய இராஜ்யத்தினை நோக்கிச் சிறகடித்துப் பறந்துள்ளார்.
பிரபுவே, இவரது ஸ்தானத்தை மேன்மைப்-படுத்துவீராக; உமது ஒப்புயர்வற்ற கருணையின் திருக்கூடாரத்தில் இவருக்கு ஆதரவளிப்பீராக. உமது மேன்மைமிகு சுவர்க் கத்தினுள் இவரைப் பிரவேசிக்கச் செய்வீராக; உமது உயர்வுமிக்க ரோஜாத் தோட்டத்தில் இருக்கும் அழியா வாழ்வினைத் தந்தருள்வீராக; அதனால் அவர் மர்மங்கள் நிறைந்த உலகில் ஒளியெனும் கடலில் மூழ்கக்கூடும்.
மெய்யாகவே நீரே தாராளமானவர், சக்திமிக்கவர், மன்னிப்பவர், வழங்குபவர்.
- `Abdu'l-Bahá