Return to BahaiPrayers.net
Facebook
மன்னித்தருளும் பிரபுவே! சில ஆன்மாக்கள் தங்களின் வாழ்நாளை அறியாமையில் கழித்தும், நட்புறவற்றும், அடங்காத்தனமுடை-யோராகவும் உள்ளனர். இருப்பினும் உமது மன்னிப்பு என்னும் சமுத்திரத்திலிருந்து வரும் ஒரே அலையின்மூலம் பாவத்தினால் சூழப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்படுவர். நீர் எவரை விரும்புகின்றீரோ, அவரை நம்பகமானவராக்குவீர், எவர் உமது தேர்வுப் பொருளாகக் கொள்ளப்பட வில்லையோ அவர் ஆணை மீறுபவராகக் கணிக்கப்படுவார். நீர், எங்களை உமது நீதி கொண்டு நடத்துவீராயின், நாங்கள் அனைவரும் பாவிகளேயல்லாது வேறிலர், ஆகவே உம்மிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் ஆகிடுவோம். ஆனால் நீர் இரக்கத்தினை மேற்கொள்வீராயின், ஒவ்வொரு பாவியும் தூயவனாகவும், ஒவ்வோர் அந்நியனும் நண்பனாகவும் ஆக்கப்படுவான். ஆதலின் உமது மன்னிப்பையும் பொறுத்தருள்தலையும் வழங்கி, அனைவருக்கும் உமது கருணையை நல்கிடுவீராக.
மன்னிப்பவரும் ஒளி வழங்குபவரும் எல்லாம் வல்லவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá