Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, குற்றங்களை மன்னித்துத் துன்பங்களைக் களைபவரே! பிழை பொறுப்பவரே, கருணைமிக்கவரே! கலங்கிய கண்களுடன் உமது தெய்வீக சாராம்சம் என்னும் அரசவையின்பால் எனது கெஞ்சுங் கரங்களை உயர்த்தி, உமது அருளினாலும் இரக்கக் குணத்தினாலும், உமது மெய்ம்மை என்னும் அரியாசனத்தின்பால் விண்ணேற்றம் அடைந்துள்ள உமது இப்பணிப்பெண்ணை மன்னிக்குமாறு உம்மை வேண்டிக் கொள்கின்றேன். பிரபுவே, உமது அருட்கொடை, தயை என்னும் மேகங்களைக் கொண்டு அவளுக்குப் பாதுகாப்பளிப்பீராக; உமது பிழைபொறுத்தல், மன்னிப்பு என்னும் சமுத்திரத்தில் அவளை மூழ்கச் செய்து, உமது தெய்வீக சுவர்க்கமான புனிதப்படுத்தப்பட்ட அவ்வுறைவிடத்தினுள் நுழைந்திட அவளுக்கு உதவிடுவீராக. நீர் மெய்யாகவே, வலிமை மிக்கவர், இரக்கமுடையவர், தாராளமானவர், கருணை மிக்கவர்.
- `Abdu'l-Bahá