Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எவரது கருணை சகலத்தையும் சூழ்ந்துள்ளதோ, எவரது குறைபொறுத்தல் எல்லாவற்றிற்கும் மேம்பட்டுள்ளதோ, எவரது வள்ளன்மை நேர்த்தி மிக்கதோ, எவரது மன்னிப்பும் தாராளத் தன்மையும் சகலத்தையும் உள்ளடக்கியுள்ளதோ, எவரது குறைபொறுத்தல் என்னும் தீப ஒளி உலகம் முழுவதையும் வியாபித்துள்ளதோ அவர் நீரே ஆவீர்! ஒளிக்கெல்லாம் பிரபுவே! பற்றார்வத்துடனும், கலங்கிய கண்களுடனும் உந்தன்பால் விண்ணெழுந்துள்ள உமது பணிப்பெண்ணின் மீது உமது கருணை என்னும் பார்வையினை விழச்செய்யுமாறு உம்மை வேண்டிக் கொள்கின்றேன். அவளுக்குத் தெய்வீக சுவர்க்கத்தின் ஆபரணங்களினால் பிரகாசித்திடும் உமது அருள் என்னும் மேலங்கியினை அணிவித்து, உமது ஒருமை என்னும் விருட்சத்தின் அடியில் அவளுக்குப் பாதுகாப்பளித்து, அவளது முகத்தை உமது கருணை, இரக்கம் என்னும் ஒளியினால் பிரகாசிக்கச் செய்வீராக. என் இறைவா, உமது பிழை பொறுத்தல் என்னும் ஆவியிலிருந்து பிறந்திடும் புனித நறுமணங்களை உமது தெய்வீகப் பணிப்பெண்ணுக்கு அருள்வீராக. அவளை உமது பேரானந்தமிகு உறைவிடத்தில் உய்திடச் செய்வீராக, உமது ஒன்றிணைதல் என்னும் பிணிதீர்க்கும் களிம்பினைக் கொண்டு அவளது துயரங்களைக் குணப்படுத்தி, உமது விருப்பத்திற்கிணங்க அவளை உமது புனித சுவர்க்கத்தினுள் நுழைய அனுமதிப்பீராக. உமது அன்பாதரவு என்னும் தேவகணங்ளை அவள் மீது தொடர்ச்சியாக இறங்கச் செய்து, உமது ஆசீர்வதிக்கப்பட்ட விருட்சத்தின் கீழ் அவளைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், அதி தாராளமானவரும், அதி வள்ளன்மையாளரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá