Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உம்மிடமிருந்து பிரிந்ததனால் உமது தீவிர நேசர்கள் புலம்புவதையும், உம் முன்னிலையிலிருந்து வெகுதூரம் இருப்பதனால் உம்மை அறிந்தோர் கதறி அழுவதையும், நீர் செவிமடுக்கின்றீர். என் பிரபுவே, உமது கிருபை எனும் கதவுகளை அவர்களின் முகங்களுக்கு முன்னே வெளிப்படையாகத் திறந்திடுவீராக; அதனால் உமது உத்தரவுக்கிணங்கவும் உமது விருப்பத்திற்கு உட்பட்டும், அவர்கள் அவற்றுள் நுழைந்து, உமது மாட்சிமையின் சிம்மாசனத்தின் முன் நின்று, உமது குரலின் உச்சரிப்புகளைச் செவிமடுத்து, உமது வதனத்தின் ஒளியின் பிரகாசத்தால், அறிவொளி பெறக்கூடும்.
நீர் விரும்பியதைச் செய்வதற்கு, நீர் வல்லவராவீர். உமது வலிய இறையாண்மை சக்தியை எவராலும் எதிர்த்திட இயலாது. நித்திய காலமுதல், உமக்கு ஈடிணையாக எவரும் இல்லாமலே, நீர் தனியொருவராக இருந்துள்ளீர்; உம்மைப் பற்றிய எல்லாச் சிந்தனைக்கும் ஒவ்வொரு வர்ணனைக்கும் மேலாக, நித்தியகாலமும் வெகுதூரம் நிலைத்திருப்பீர். ஆதலால், உமது கிருபையினாலும் அருட்கொடையினாலும், உமது ஊழியர்களின் மீது கருணை காட்டிடுவீராக; உமது அண்மை எனும் சமுத்திரத்தின் கரைகளிலிருந்து அவர்களைப் பின்தங்கிடாதிருக்கச் செய்திடுவீராக. நீர் அவர்களைக் கைவிட்டு விட்டால், அவர்களிடம் நட்புப்பாராட்ட யாருளர்? அவர்களை உம்மிடமிருந்து நீரே வெகுதூரம் வைத்துவிட்டால், எவரால் அவர்களுக்கு ஆதரவளிக்கமுடியும்? உம்மைத் தவிர அவர்களுக்கு வேறு கடவுள் இலர்; வழங்குவதற்கென உம்மைத் தவிர வேறெவருமிலர். உமது அபரிமித கிருபையின் வாயிலாக அவர்களுக்குத் தாராளமாகத் தந்தருள்வீராக.
மெய்யாகவே, என்றும் மன்னித்தருள்பவரும், அதி கருணைமிக்கவரும் நீரே.
- Bahá'u'lláh