Return to BahaiPrayers.net
Facebook
இரங்குபவரும், சர்வ வள்ளன்மையாளரும் அவரே யாவார்! கடவுளே, என் கடவுளே! என்னைப் பார்க்கின்றீர்; என்னைத் தெரிந்திருக்கின்றீர். எனது தஞ்சமும் புகலிடமும் நீரே. உம்மையன்றி வேறெவரையும் நான் நாடியதில்லை, நாடப்போவதுமில்லை; உமது அன்பு என்னும் பாதையைத் தவிர வேறெந்தப் பாதையிலும் நான் அடியெடுத்து வைத்ததில்லை; வைக்கப் போவதுமில்லை. நம்பிக்கை இழந்துள்ள இருள்மிகு இவ்விரவில் எதிர்பார்ப்புடனும், அதி நம்பிக்கையுடனும் எனது கண்கள் உமது எல்லையற்ற தயவெனும் அதிகாலையின்பால் திரும்புகின்றன; எனது சோர்வுற்ற ஆன்மா, இவ் வைகறையில், உமது அழகு, பூரணத்துவம் என்பனவற்றின் நினைவில் புத்துணர்வுப் பெற்று வலுவடைந்துள்ளன. உமது கருணை என்னும் அருள் எவருக்கு உதவுகின்றதோ, அவர், ஒரு துளியேயாயினும், எல்லையற்ற சமுத்திரமாகி விடுவார்; சாதாரண ஓர் அணுவிற்கு உமது அன்புப் பரிவெனும் அருட்பொழிவு உதவிடுமாயின், ஒரு மின்னிடும் விண்மீனைப் போல அது ஒளிர்ந்திடும்.
தூய்மை என்னும் ஆவியானவரே, அதி வள்ளன்மைமிகு வழங்குபவரே , கவரப்பட்டவனும் உற்சாகமடைந்தவனுமான இவ்வூழியனை உமது பாதுகாப்பு என்னும் அடைக்கலத்தில் காத்தருள்வீராக. இப்படைப்புலகினில் அவன் உமது அன்பில் உறுதியாகவும் நிலையாகவும் இருந்திட உதவுவதோடு இச்சிறகொடிந்த பறவை உமது விண்ணுலக விருட்சத்திலுள்ள தெய்வீகக் கூட்டில் புகலிடத்தையும், பாதுகாப்பையும் பெற்றிட அருள்வீராக.
- `Abdu'l-Bahá