Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, எனது பேரன்புமிகு நேசரே, எனது அரசரே, எனதாவலே, உந்தன்பால் என் நன்றியினை எந்த நா எடுத்தியம்ப இயலும்? நான் கவனமற்றிருந்தேன், நீர் என்னை விழிப்புறச் செய்தீர். நான் உம்மிடமிருந்து அப்பால் திரும்பி இருந்தேன், நீர் கிருபை கூர்ந்து என்னை உந்தன்பால் திரும்பிட உதவினீர். நான் இறந்தவன் போலிருந்தேன்; நீர் உமது ஜீவ நீரினால் என்னைப் பிழைத்தெழச் செய்தீர். நான் வாடி இருந்தேன், அதிபெரும் கருணைமிகும் எழுதுகோலிலிருந்து பெருக்கெடுத்து வந்துள்ள உமது தெய்வீகத் திருவாக்கினால், என்னைப் புத்துயிர்ப் பெறச் செய்தீர்.
அரும் பெருங்கடவுளே, படைப்பினம் யாவும் உமது அருட்பாலிப்பினாலேயே தோன்றின; உமது வள்ளன்மை என்னும் நீரிலிருந்தும் உமது கருணை எனும் சமுத்திரத்திலிருந்தும் அவற்றை விலக்கிடாதீர். எல்லாக் காலங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் உதவி, ஆதரிக்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்டு, அருள் என்னும் சுவர்க்கத்திலிருந்து உமது ஆதி தயவினைத் தேடுகின்றேன். உண்மையிலேயே, நீரே, அருட்கொடையின் பிரபுவும் நித்திய இராஜ்யத்தின் மன்னரும் ஆவீர்.
- Bahá'u'lláh