Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, என் ஆண்டவரே, எந்தன் பிரபுவே! நான் எனது சுற்றத்தாரிடமிருந்து பற்றறுத்துக்- கொண்டு, உம் மூலமாக உலகத்தில் வாழும் யாவற்றிலிருந்தும் சுதந்திரமடைந்து, உமது பார்வையில் பாராட்டத் தக்கதனைப் பெற்றிட என்றென்றும் ஆயத்தமாயிருக்கின்றேன். உம்மைத் தவிர வேறெதனிலும் இருந்து விடுதலை பெற உதவக் கூடிய அந்நன்மைகளை என்பால் வழங்கி, எனக்கு, உமது எல்லையில்லாத் தயையினைப் போதிய அளவு வழங்குவீராக. மெய்யாகவே, நிரம்பிய அருளைக் கொண்டுள்ள பிரபு நீரே ஆவீர்.
- The Báb