Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே! நாங்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள், பரிவு காட்டுவீராக; நாங்கள் ஏழைகள், உமது செல்வக் கடலிலிருந்து ஒரு பகுதியை அளிப்பீராக; நாங்கள் வறியவர்கள், எங்களின் தேவையைப் பூர்த்தி செய்வீராக. நாங்கள் தாழ்ந்தவர்கள், உமது மேன்மையை அளிப்பீராக. வானத்தில் உலவும் பறவைகளும் பரந்த வெளியில் வாழும் பிராணிகளும் உம்மிடமிருந்தே அன்றாட உணவைப் பெறுகின்றன. எல்லா உயிர்களும் உமது பாதுகாப்பிலும் அன்புக் கருணையிலும் பங்கு பெறுகின்றன.
இப்பலவீனமானவன் உமது திவ்விய அருளைப் பெறாது தடுத்திடாதீர். உமது சக்தியால் ஆதரவற்ற இவ்வான்மாவுக்கு அருள் புரிவீராக.
எங்களுக்கு அன்றாட உணவளித்து, வாழ்க்கையின் தேவைகளை அதிகரிப்பீராக; அதனால் நாங்கள் உம்மைத் தவிர வேறு எவரிடத்திலும் நம்பிக்கை வைக்காதிருப்போம். உம்மிடமே முழுமையாகத் தொடர்பு கொள்வோம். உமது வழியில் நடந்து, உமது மறைபொருளை எடுத்தியம்புவோம். எல்லாம் வல்லவரும் மனித இனத்தின் தேவைகளை அளிப்பவரும் நீரே.
- `Abdu'l-Bahá