Return to BahaiPrayers.net
Facebook
கருணைமிக்கப் பிரபுவே! நாங்கள் உமது புனித கதவருகில் அடைக்கலம் பெற்றிருக்கும், உமது வாயிற்படியின் ஊழியர்கள் ஆவோம். இந்தப் பலமான தூணைத் தவிர வேறெந்த புகலிடத்தையும் நாடிடவில்லை; உமது பாதுகாப்பைத் தவிர, வேறெந்த உறைவிடத்தின்பாலும் நாங்கள் திரும்பிடவில்லை. எங்களைப் பாதுகாத்து, எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு ஆதரவளித்திடுவீராக. உமது நல்விருப்பத்தை மட்டுமே நேசித்திடவும், உமது புகழை மட்டுமே உச்சரித்திடவும், உண்மை எனும் பாதையை மட்டுமே பின்பற்றிடுபவர்களாகவும் எங்களை ஆக்கிடுவீராக. அதனால் நாங்கள் உம்மைத் தவிர மற்றனைத்தையும் கைவிடுமளவுக்குச் செழுமை பெறக் கூடும்; உமது வள்ளன்மை எனும் சமுத்திரத்திலிருந்து எங்கள் பரிசுகளைப் பெற்றிடச் செய்திடுவீராக. அதனால் நாங்கள் என்றென்றும் உமது சமயத்திற்குச் சேவைபுரிந்திட முயன்றிடவும், உமது இனிய நறுமணங்களை நாலாதிசையிலும் பரவச் செய்திடவுங்கூடும். நாங்கள் அதனால் எங்களை மறந்து, உம்முடன் மட்டுமே ஈடுபாடு கொண்டு, மற்றனைத்தையும் கைவிட்டு உம்முடன் மட்டுமே நேரத்தைச் செலவிடக் கூடும்.
வழங்குபவரே, மன்னித்தருள்பவரே! உமது கிருபையையும் அன்புக் கருணையையும், உமது பரிசுகளையும், உமது அருட்கொடைகளையும் எங்களுக்குத் தந்தருளி, எங்களை ஆதரிப்பீராக; நாங்கள் அதனால் எங்களின் இலக்கை அடையக்கூடும். நீரே சக்திமிக்கவர், திறன்- வாய்ந்தவர், அறிந்தவர், ஞானதிருஷ்டியுடையவர்; மெய்யாகவே, நீரே தாராளமானவர்; மெய்யாகவே, நீரே சகல கருணைமிக்கவர்; மெய்யாகவே நீரே என்றும் மன்னித்தருள்பவர்; மனந்திரும்புதலுக்கு உரியவரும், மிகக் கடுமையான பாவங்களை மன்னிப்பவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá