Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, உமது பெயரில் வழங்கப்பட்டிருக்கும் விருந்தினை அகற்றிவிடாதீர்; உமது தணியாத தீயினால் மூட்டப்பட்டுள்ள எரியும் ஒளிப்பிழம்பை அணைத்துவிடாதீர். உமது புகழ், உமது நினைவு ஆகியவற்றின் மெல்லிசையில் முணு முணுத்திடும் உமது உயிர் நீரை வழிந்தோடுவதிலிருந்து நிறுத்திவிடாதீர். உமது அன்பெனும் மணத்தைச் சுவாசித்திடும் உமது இனிய சுகந்தத்தின் நறுமணத்தை உமது ஊழியர்களுக்குத் தரமறுத்திடாதீர்.
பிரபுவே! மனுக்குலம் முழுவதன் விதியை உமது பிடியில் வைத்திருப்பவரே! உமது புனிதர்களின் வேதனைமிக்கக் கவலைகளை ஆறுதலாகவும், அவர்களின் கஷ்டங்களை சுகமாகவும், அவர்களின் தாழ்வைப் புகழாகவும், அவர்களின் சோகத்தைப் பேரின்ப மகிழ்ச்சியாகவும் மாற்றிடுவீராக.
மெய்யாகவே, ஏகமானவரும், தனியொருவரும், வல்லவரும், சர்வமும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá