Return to BahaiPrayers.net
Facebook
நித்தியத்தின் மன்னரே, நாடுகளை உருவாக்குபவரே, அழியக்கூடிய ஒவ்வோர் எலும்பின் வடிவமைப்பாளரே, நீர் புகழப்படுவீராக! மனுக்குலம் முழுவதையும் உமது மாட்சிமை மற்றும் பேரொளி எனும் தொடுவானத்திற்கு அழைத்து, உமது கிருபையும், தயையுமான அரசவையின்பால் உமது ஊழியர்களுக்கு வழிகாட்டிய உந்தன் திருநாமத்தினால், உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்துக் கொண்டோருள் ஒருவனாகவும், உம்மை நோக்கித் திரும்பியுள்ளோரை, உம்மால் ஆணையிடப்பட்ட துரதிர்ஷ்டங்களின் காரணமாக, உமது பரிசுகளின் திசையை நோக்கித் திரும்புவதிலிருந்து பின்வாங்கிடாதவர்களுள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டமைக்காக நான் உம்மைப் பிரார்த்திக்கின்றேன்.
என் பிரபுவே, உமது அருட்கொடை எனும் பிடியைப் பிடித்துக்கொண்டுள்ள நான், உமது தயை எனும் மேலாடையின் விளிம்பினையும் இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன். அதனால், உம்மைத் தவிர மற்றனைத்து நினைவுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்- படுத்தக்கூடிவற்றை உமது வள்ளன்மை எனும் மேகங்களிலிருந்து என் மீது பொழியச் செய்திடுவீராக; மேலும், உமது ஒப்பந்தத்தை மீறி, உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கையற்று, எவரை எதிர்த்து நிந்தனைச் செய்வோரின் சூழ்ச்சிகள் அணிவகுத்து நிற்கின்றனவோ, மனுக்குலம் முழுவதன் ஆராதனையின் இலக்காக விளங்கிடும் அவர்பால் என்னைத் திரும்பிடச் செய்வீராக.
என் பிரபுவே, உமது நாள்களில் உமது வஸ்திரத்தின் நறுமணங்களை எனக்களிக்க மறுத்திடாதீர்; மேலும் உமது வதனம் எனும் வெளிச்சத்தின் சுடரொளிகளின் தோற்றத்தால் வெளிவந்த உமது திருவெளிப்பாட்டின் சுவாசங்களை எனக்குத் தராமல் தடுத்திடாதீர். நீர் விரும்பியதைச் செய்வதில் நீரே சக்தி வாய்ந்தவர். உமது விருப்பத்தை எதிர்த்திடவோ, உமது சக்தியால் நீர் கொண்டுள்ள நோக்கத்தினைத் தடுத்திடவோ எவற்றாலும் முடியாது.
சர்வ வல்லவரும், சர்வ விவேகியுமான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
- Bahá'u'lláh