Return to BahaiPrayers.net
Facebook
வலிமை மிக்கவரும், மன்னிப்பவரும், கருணை மிக்கவரும் அவரே!
கடவுளே என் கடவுளே! நரகம், பிழை ஆகிய பாதாளத்தில் உமது ஊழியர்கள் இருப்பதை நீர் காண்கின்றீர்; உலகின் ஆவலானவரே, தெய்வீக வழிகாட்டல் எனும் உமது ஒளி எங்கே? உதவியற்ற, பலவீனமான அவர்களின் நிலையை நீர் அறிவீர்; விண்ணுலக, மண்ணுலகச் சக்திகளைத் தன் பிடிக்குள் வைத்திருப்பவரே, உமது சக்தி எங்கே?
பிரபுவே எனதாண்டவரே, உமது அன்புக் கருணை எனும் ஒளிகளின் பிரகாசத்தினாலும், உமது அறிவு, விவேகம் எனும் சமுத்திரத்தின் பொங்கியெழுகின்ற அலைகளின் பெயராலும், உமது இராஜ்யத்தின் மக்களைக் கவர்ந்திட்ட உமது புனித வார்த்தையினாலும், உமது திருநூலின் கட்டளைகளைப் பின்பற்றுபவர்களுள் ஒருவனாக நான் ஆவதை ஏற்குமாறு உம்மிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
உமது அருட்கொடை எனும் கோப்பையிலிருந்து தெய்வீக அகத்தூண்டல் எனும் மதுரசத்தினைப் பருகி, நீர் விரும்பியதைச் செய்திட விரைந்து, உமது திருவொப்பந்தத்தையும், சாசனத்தையும், கடைப்பிடித்தவர்களான உமது நம்பிக்கைக்குப் பாத்திரமானோருக்கு நீர் விதித்துள்ளவற்றை, எனக்கும் விதித்தருள்வீராக. நீர் விரும்பியதைச் செய்திட சக்தி படைத்தவர், நீரே ஆவீர். எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமானவரான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
பிரபுவே, மனிதர்கள் யாவருக்கும் பிரபுவானவர் நீரே. உமது அருட்கொடையினால், இம்மையிலும் மறுமையிலும் என்னைச் செழிப்புறவும், உந்தன்பால் ஈர்த்திடவும் செய்பவற்றை எனக்கு விதித்தருள்வீராக. ஏகனானவரும், வலிமை-யானவரும், ஒளிமயமானவருமான உம்மைத் தவிர, கடவுள் வேறிலர்.
- Bahá'u'lláh