Return to BahaiPrayers.net
Facebook
பரிவிரக்கமுள்ள இறைவா! என்னை விழிப்பூட்டி உணர்வு பெறச் செய்தமைக்காக நன்றி கூறுகின்றேன். எனக்குக் காணும் கண்ணை அளித்துக் கேட்கும் செவியையும் அருளியுள்ளீர்; உமது இராஜ்யத்தின்பால் வழிநடத்தி என்னை உமது பாதைக்கும் வழிகாட்டியுள்ளீர். எனக்கு நேர்வழி காட்டி என்னை விடுதலை என்னும் கலத்தில் புகச் செய்திருக்கின்றீர். இறைவா! என்னை நிலையாகவும் அசைக்கவியலாத நம்பிக்கை-யுடனும் இருக்கச் செய்வீராக. பெருஞ் சோதனைகளிலிருந்து என்னைக் காத்து, உமது ஒப்பந்தமும் இறுதிப் பத்திரமுமாகிய பலம் பொருந்திய கோட்டையில் என்னை வைத்துப் பாதுகாப்பீராக. நீரே செவிமடுப்பவர்.
இரக்கமுள்ள ஆண்டவனே! உமது அன்பெனும் ஒளியால் பிரகாசிக்கக் கூடிய கண்ணாடியைப் போன்ற உள்ளத்தை எனக்களித்து, உமது தெய்வீக அருளின் பொழிவினால் இவ்வுலகை ஒரு ரோஜாத் தோட்டமாக மாற்றவல்ல சிந்தனைகளை எனக்கு வழங்கிடுவீராக.
நீரே இரக்கமுடையவர்; கருணை மிக்கவர்; மஹா கொடையாளரான இறைவனும் நீரே.
- `Abdu'l-Bahá