Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே, என் நம்பிக்கையே! உமது அன்பர்களை உமது வலுமிகு ஒப்பந்தத்தில் உறுதியுடன் இருக்கவும், உமது தெளிவான சமயத்தின்பால் விசுவாசமுடன் இருக்கவும், பிரகாசங்கள் என்னும் திருநூலில் நீர் விதித்துள்ள கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு உதவிடுவீராக; அதனால் அவர்கள் வழிகாட்டுதல் என்னும் விருதுக்கொடிகளாகவும், விண்ணுலகத் திருக் கூட்டத்தினரின் விளக்குகளாகவும், உமது முடிவில்லா மெய்யறிவு என்னும் ஊற்றுகளாகவும், தெய்வீக வானிலிருந்து ஒளிர்ந்தவாறு நேர்வழி காட்டிடும் விண்மீன்களாகவும் ஆகக் கூடும்.
மெய்யாகவே, நீரே வெற்றி கொண்டிட இயலாதவர், எல்லாம் வல்லவர், சர்வ சக்தி வாய்ந்தவர்.
- `Abdu'l-Bahá