Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, என் கடவுளே, உமது ஊழியர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்தி உமது மகத்தான நோக்கத்தினை அவர்களுக்கு வெளிப்படுத்துவீராக. அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து உமது விதிகளைப் பின்பற்றட்டும். கடவுளே, அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து, உமக்கு ஊழியம் செய்யவும் பலமளிப்பீராக. கடவுளே, அவர்களைத் தனியே விட்டு விடாமல் உமதறிவின் ஒளியால் அவர்களின் கால்களுக்கு வழி காட்டுவீராக. உமதன்பினால் அவர்களின் உள்ளங்களைக் களிக்கச் செய்வீராக. மெய்யாகவே, நீரே அவர்களுக்கு உதவுபவரும், பிரபுவும் ஆவீர்.
- Bahá'u'lláh