Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, நான் உமது பாதுகாப்பினில் கண்விழித்துள்ளேன்; அப் பாதுகாப்-பிடத்தினைத் தேடுபவன் உமது ஆதரவெனும் புகலிடத்திலும் உமது பாதுகாப்பெனும் கோட்டையிலும் வசிப்பது பொருத்தமே. என் பிரபுவே, என் புற உருவினைக் காலைக் கதிரவனின் கிரணங்களினால் ஒளிபெறச் செய்தது போல் எனது அக உருவினையும் உமது வெளிப்பாடெனும் பகலூற்றின் பிரகாசங்களினால் ஒளிரச் செய்வீராக.
- Bahá'u'lláh