Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, உமது கிருபையினால் இக்காலையில் எழுந்து, உம்மில் முழு நம்பிக்கை வைத்து, என்னை உமது பொறுப்பில் ஒப்புவித்து என் இல்லம் நீங்கியுள்ளேன். உமது கருணை என்னும் சுவர்க்கத்திலிருந்து உமது ஆசீர்வாதத்தினை என்மீது பொழிந்து, எனது எண்ணங்களை உம் மீது உறுதியாக நிலைக்கச் செய்து, உமது பாதுகாப்பின் கீழ் வெளியே செல்ல நீர் எனக்கு உதவியது போல், நான் பாதுகாப்பாக இல்லந் திரும்பவும் உதவிடுவீராக.
ஒரே, ஒப்பற்ற, எல்லாமறிந்த, சர்வ விவேகியான இறைவன், உம்மையன்றி வேறெவருமிலர்.
- Bahá'u'lláh