Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, உமது ஊழியர்கள் உம்மை நோக்கிச் சென்றிட நீர் விரும்பிய விதத்திற்காக, நான் உமது மன்னிப்பையும், பிழை பொறுத்தலையும் மன்றாடிக் கேட்கின்றேன். உமது இறைமைக்குப் பொருந்தியவாறு, எங்கள் பாவங்களைக் கழுவிட வேண்டும் என்றும், என்னையும், என் பெற்றோரையும், உமது மதிப்பின்படி, உமது எல்லைத்தாண்டிய இறையாண்மையின் மதிப்பிற்குரிய விதத்திலும், உமது விண்ணுலகச் சக்தியின் பேரொளிக்கு ஏற்றவாறும், உமது அன்பென்னும் உறைவிடத்திற்குள் நுழைந்திட்டோரின் பாவங்களையும் மன்னிக்குமாறு நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்.
என் கடவுளே! உம்மிடம் மன்றாடுவதற்கென நீர் என் ஆன்மாவுக்கு உத்வேகம் அளித்துள்ளீர்; மற்றும் நீர் இல்லையெனில், நான் உம்மை அழைத்திருக்க மாட்டேன். நீர் புகழ்ந்து போற்றப்படுவீராக; நீர் என்னிடம் உம்மை வெளிப்படுத்தியமைக்காக நான் உம்மைப் போற்றுகின்றேன்; உம்மை அறிந்திடவேண்டும் எனும் என் கடமையில் நான் தவறியதற்காகவும், உமது அன்பென்னும் பாதையில் நடக்கத் தவறியதற்காகவும் என்னை மன்னிக்குமாறு உம்மை நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
- The Báb