Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே! இவ்வதி உயர்வான அருளாட்சிக் காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களின் சார்பில் பரிந்து வேண்டுவதை நீர் ஏற்றுக் கொள்கின்றீர். இது, இவ்வருளாட்சியின் விசேஷமான, அளவற்றக் கடாட்சங்களில் ஒன்றாகும். ஆகவே, கருணைமிக்கப் பிரபுவே! உமது தனித் தன்மை என்னும் வாயிலில், உமது இவ்வூழியனின் வேண்டுகோளை ஏற்று, அவனது தந்தையை உமது கிருபை எனும் சமுத்திரத்தில் மூழ்குவிப்பீராக; ஏனெனில் இம்மைந்தன் உமக்குச் சேவை செய்ய எழுந்து, உமது அன்பெனும் பாதையில் எல்லா வேளைகளிலும் கடும் முயற்சி செய்கின்றான். மெய்யாகவே, நீரே வழங்குபவர், மன்னிப்பவர், அன்பாதரவுடையவர்.
- `Abdu'l-Bahá