Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே! உமது இப்பணிப்- பெண்ணானவள், உம்மீது நம்பிக்கை வைத்து, தனது முகத்தை உந்தன் பால் திருப்பி, உமது விண்ணுலக அருட்கொடைகளைத் தன்மீது விழச் செய்யுமாறும், உமது ஆன்மீக மர்மங்களைத் தனக்கு வெளிப்படுத்திடுமாறும், உமது இறைமையின் ஒளிகளைத் தன் மீது வீசிடுமாறும் உம்மை வேண்டிக் கொள்கின்றாள்.
என் பிரபுவே! என் கணவரின் கண்களைப் பார்க்கச் செய்வீராக; உம்மைச் சார்ந்த அறிவின் ஒளியால் அவரது இதயத்தை மகிழ்விப்பீராக; உமது ஒளிரும் அழகின்பால் அவரது மனதை ஈர்த்திடுவீராக; உமது தெளிவாய்த் துலங்கிடும் சுடரொளியினை அவருக்கு வெளிப்படுத்துவதன் வழி அவரது ஆவியினைக் களிப்புறச் செய்வீராக.
என் பிரபுவே! அவரது பார்வையின் முன்னுள்ள திரையினை விலக்குவீராக. உமது அபரிமிதமான அருட்கொடைகளை அவர் மீது பொழிந்து, உம் மீதான அன்பெனும் திராட்சை ரசத்தினைக் கொண்டு அவரை மதிமயங்கச் செய்து, கால்கள் இம்மண்ணுலகின் மீது நடந்திடினும், தங்களின் ஆன்மாக்கள் உயர்ந்த வானத்தில் பறந்திடும் உமது தூத கணங்களுள் அவரையும் ஒருவராக ஆக்கிடுவீராக. உமது மக்களின் மத்தியில், அவரை, உமது விவேகத்தினைக் கொண்டு ஒளிர்ந்திடும் பிரகாசமிகு தீபமாக ஆக்கிடுவீராக.
மெய்யாகவே நீரே மதிப்பு மிக்கவர், என்றுமே வழங்குபவர், திறந்த கைகளை உடையவர்.
- `Abdu'l-Bahá