Return to BahaiPrayers.net
Facebook
“குணப்படுத்துதல் கோரி வேண்டப்படுவதற்காக வெளிப்படுத்தப்பட்ட பிரார்த்தனைகள், உடல், ஆன்மா இரண்டையும் குணப்படுத்தவல்லவை. ஆதலின் ஆன்மாவையும் உடலையும் குணப்படுத்துவதற்கென இவற்றினைக் கூறிடுவீர்...”
— அப்துல்-பஹா
கடவுளே, என் கடவுளே, உமது குணப்படுத்துதல் என்னும் கடலினாலும், உமது அருள் என்னும் விடிவெள்ளியின் சுடரொளிகளாலும், நீர், உமது ஊழியர்களை ஆட்கொண்டிட்ட உமது நாமத்தினாலும், எங்கும் வியாபித்துள்ள உமது அதிமேன்மையான வார்த்தையின் சக்தியினாலும், உந்தன் மேன்மைமிகு எழுதுகோலின் ஆற்றலாலும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ளோர் அனைவரின் படைப்பிற்கு முற்பட்ட உமது கருணையாலும், உமது வள்ளன்மை என்னும் நீரினாலும், என்னை ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் சீர்க்குலைவிலிருந்தும், எல்லா வலுக்குறைவில் இருந்தும் தளர்ச்சியிலிருந்தும் தூய்மைப்- படுத்துமாறு நான் உம்மிடம் வேண்டிக்-கொள்கின்றேன்.
என் பிரபுவே, உம்மிடம் தாழ்ந்து வேண்டுபவர் தனது நம்பிக்கையை உம்மீது வைத்து உமது தாராளத் தன்மை என்னும் கயிற்றினைப் பற்றியவாறு உமது வள்ளன்மை என்னும் நுழைவாயிலில் காத்து நிற்பதை நீர் பார்க்கின்றீர். உமது அருள் என்னும் சமுத்திரத்திலிருந்தும் உமது அருட்குணம் என்னும் விடிவெள்ளியினிடம் இருந்தும் அவர் தேடுவதனைக் கொடுக்க மறுத்து விடாதீர்.
உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. என்றென்றும் மன்னித்தருளும், அதி தாராள குணமுடைய கடவுள் உம்மையன்றி வேறெவருமிலர்.
- Bahá'u'lláh