Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எனதாண்டவரே, ஒளி உமக்கே உரியதாகுக! எதன் மூலமாக உமது வழிகாட்டல் எனும் விருதுக்கொடியை உயர்த்தியும், உமது அன்புக்கருணை எனும் பிரகாசத்தினைப் பொழிந்தும், உமது ஆதிக்கத்தின் மாட்சிமையை வெளிப்படுத்தியுமுள்ளீரோ; எதன் மூலமாக உமது நாமங்கள் எனும் விளக்கு உமது பண்புகள் எனும் தனியிடத்தில் தோன்றியும், உமது ஒற்றுமையின் திருக்கூடாரமானவரும், உமது பற்றின்மையின் அவதாரமானவரும் ஒளிவீசியுள்ளாரோ; எதன் மூலமாக உமது வழிகாட்டல் எனும் வழிகள் தெரிவிக்கப் பட்டும், உமது நல்விருப்பம் எனும் பாதைகள் குறித்துக்காட்டப்பட்டனவோ; எதன் மூலமாகப் பிழை எனும் அடித்தளங்கள் நடுக்கமுறச் செய்யப்பட்டதோடு, கொடுமையின் அடையாளங்கள் அழிக்கப்பட்டனவோ; எதன் மூலமாக விவேகம் எனும் ஊற்றுகள் பீறிட்டுப் பாய்ந்தும், விண்ணுலக மேஜை கீழே அனுப்பப்பட்டதோ; எதன் மூலமாக நீர் உமது ஊழியர்களைப் பாதுகாத்தும், உமது குணப்படுத்தலைத் தந்தருளினீரோ; எதன் மூலமாக நீர் உமது மென்கருணையை உமது ஊழியர்களுக்கு வெளிப்படுத்தி, உமது மன்னிப்பை உமது உயிரினங்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளீரோ — உமது அந்தத் திருநாமத்தின் பேயரால்.
பற்றுறுதியாக இருந்து உம்மிடமே திரும்பியவனைப் பாதுகாத்தும், உமது கருணையைப் பற்றிக் கொண்டும், உமது அன்பான வழங்குதலின் விளிம்பினைப் பிடித்துக்கொண்டும் உள்ளான். ஆதலால், உமது குணப்படுத்தலை அவனுக்குக் கீழே அனுப்பியும், அவனை ஆரோக்கியமானவனாக ஆக்கியும், உம்மால் தந்தருளப்பட்ட ஒரு சீரான தன்மையை வழங்கியும், உமது மேன்மைத்தன்மையால் அருளப்பட்ட சாந்தமான ஒரு தன்மையையும் வழங்கிடுவீராக.
மெய்யாகவே, நோய்த் தீர்ப்பவரும், பாதுகாப்பவரும், உதவுபவரும், வல்லவரும், சக்தி மிக்கவரும், சர்வ ஒளிமயமானவரும், சகலமும் அறிந்தவரும் நீரே ஆவீர்.
- Bahá'u'lláh