Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! நீர், உமது ஊழியர்களைத் தூண்டியும், உமது நகரங்களை எழுப்பியுமுள்ள உமது அதி பெரும் நாமத்தின் பேராலும், உமது மிகச் சிறந்த பட்டங்களாலும் பன்மடங்கான அருட்-கொடைகளை நோக்கித் உமது மக்களைத் திரும்பச் செய்திடவும், உமது விவேகம் எனும் திருக்கூடாரத்தை நோக்கி அவர்கள் தங்களின் வதனங்களைத் திருப்பிடச் செய்யுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் மேலும் நாமங்களுக்கெல்லாம் அரசன் என நீர் விதித்திட்ட நாமமாகிய, உமது நிழல்தரும் நாமத்தின் பாதுகாப்பின் கீழ் உறைந்து கிடக்கும் சொர்க்கத்தின்பால் எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டுள்ள ஆன்மாக்களின் பார்வையைத் திருப்பிடாது தடுத்திட்ட நோய்களைக் குணப்படுத்துவீராக. உமது விரும்பியதைச் செய்திடுவதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர். எல்லா நாமங்களின் சாம்ராஜ்யமும் உமது பிடிகளிலேயே உள்ளன. வலிமைமிக்கவரும், விவேகியுமான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
என் பிரபுவே நான் ஓர் அற்ப உயிரினமாவேன்; நான் உமது செல்வங்களின் விளிம்பினைப் பற்றிக்கொண்டுள்ளேன். நான் கடும் நோய்க்கு ஆளாகியுள்ளேன்; உமது குணப்படுத்துதல் எனும் கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன். என்னைச் சூழ்ந்துள்ள நோய்களிலிருந்து என்னை விடுவிப்பீராக; உமது கிருபை, கருணை ஆகியவற்றின் நீர்களைக் கொண்டு என்னை நன்றாகக் கழுவிடுவீராக; உமது மன்னிப்பு, அருட்கொடை ஆகியவற்றின் வாயிலாக, ஆரோக்கியம் எனும் வஸ்திரத்தைக் கொண்டு என்னை அணிவிப்பீராக. ஆதலால், என் கண்களை உம்மீது பதியச் செய்து, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றின் மீதுள்ள பற்றுகள் அனைத்தையும் என்னிடமிருந்து அகற்றிடுவீராக. நீர் ஆசைப்படுவதைச் செய்திடவும், நீர் விரும்பியதை நிறைவேற்றிடவும் எனக்கு உதவிடுவீராக.
மெய்யாகவே, இம்மை, மறுமை ஆகியவற்றின் வாழ்வுக்குப் பிரபு நீரே ஆவீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், அதி கருணைமிக்கவரும் நீரே ஆவீர்.
- Bahá'u'lláh