Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே, உமது நாமங்களின் மூலம் நோயுற்றோர் குணப்படுத்தப்- படுகின்றனர்; தாகமுற்றோர் நீர் வழங்கப் படுகின்றனர்; கடும் வேதனையுற்றோர் அமைதிப்படுத்தப் படுகின்றனர்; வழிதவறியோர் வழிகாட்டப்படுகின்றனர், தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்படுகின்றனர்; ஏழைகள் செல்வம் வழங்கப்படுகின்றனர்; அறியாமையில் உள்ளோர் அறிவொளியளிக்கப் படுகின்றனர்; சோர்வுற்றோர் ஒளிர்விக்கப்படுகின்றனர், கவலையுற்றோர் மகிழ்ச்சியூட்டப் படுகின்றனர், குளிருற்றோர் வெப்பமூட்டப் படுகின்றனர்; நசுக்கப்பட்டோர் எழச் செய்யப்படுகின்றனர். என் இறைவா, உமது நாமத்தின் மூலமாகப் படைப்புப் பொருள்கள் யாவும் உயிர்பெற்றன; விண்ணுலகங்கள் பரப்பப்பட்டன; மண்ணுலகம் நிறுவப்பட்டது; மேகங்கள் திரட்டப்பட்டு பூமி மீது மழை பொழியச் செய்யப்பட்டது; மெய்யாகவே, உமது படைப்பினங்கள் யாவற்றுக்கும் இதுவே உமது அருளின் அடையாளமாகும்.
ஆகவே, நீர், உமது நாமத்தினால் எதன் மூலம் உமது இறைமையை வெளிப்படுத்தி, உமது சமயத்தினைப் படைப்பனைத்திற்கும் மேலாக உயர்த்தி, உமது அதிசிறந்த பட்டங்கள், அதி மகத்தான குணங்களினாலும், உமது தலைசிறந்ததும் உயர்ந்ததுமான திருவுரு புகழப்படும் எல்லாப் பண்புகளினாலும், இந்த இரவில், நீர், உமது கருணை என்னும் மேகங்களிலிருந்து, உமது ஒளிமயமான திருவுருவுடன் தொடர்புப்படுத்தியிருக்கும் உமது படைப்பெனும் இராஜ்யத்திலுள்ள, இப்பச்சிளங் குழந்தையின் மீது, உமது குணப்படுத்துதல் என்னும் மழையினைப் பொழியச் செய்திடுமாறு, உம்மிடம் நான் மன்றாடுகின்றேன்.
என் இறைவா, உமது கிருபையினால் நலம், ஆரோக்கியம் என்னும் அங்கியினை இக்குழந்தைக்கு அணிவித்திடுவீராக. என் அன்பரே, அவனை, ஒவ்வொரு நோயிலிருந்தும் சீர்க்குலைவிலிருந்தும், உமக்கு அருவருப்பான ஒவ்வொன்றிலிருந்தும் காத்தருள்வீராக. நீர், உண்மையாகவே, அதி சக்தி வாய்ந்தவர், சுயஜீவியானவர். மேலும், என் இறைவா, இவ்வுலகிற்கும் மறுவுலகிற்கும், கடந்தகால, வருங்கால, தலைமுறைகளுக்குமான நன்மை-களையும் அவன்பால் அனுப்பியருள்வீராக. உமது வலிமையும் விவேகமும், மெய்யாகவே, இதற்கு ஈடானதாகும்.
- Bahá'u'lláh