Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே, எனதாண்டவரே! உமது கட்டளையின் திருநூல்களுள் உமது மாற்றவியலாத ஆணையின் நிருபங்களில் தனிச்சிறந்த ஒரு ஸ்தானத்தை நீர் வழங்கியுள்ள உமது ஊழியர்களுள் ஒருவரின் இடைப்பகுதியிலிருந்து பிறந்திட்ட ஒரு குழந்தை இதுவே.
இந்தக் குழந்தை, உமது ஊழியர்கள் மத்தியில் மேலும் முதிர்ச்சி பெற்ற ஆன்மாவாக ஆகிட, அவர்கள் ஆவலின் இலக்கை அடைந்திட இயலச் செய்திட்ட அனைவரையும் உமது நாமத்தின் பேரில், நான் உம்மிடம் மன்றாடுகிறேன். உமது நாமத்தின் சக்தியால் அவனைப் பிரகாசிக்கச் செய்திடுவீராக; உமது புகழைப் பாடிடவும், அவன் முகத்தை உம்மை நோக்கிச் செலுத்திடவும், உம்மிடம் நெருங்கிச் சென்றிடவும் அவனை இயலச் செய்திடுவீராக. மெய்யாகவே, நித்திய காலமும் நீர் விரும்பியதைச் செய்திடுவதற்குச் சக்தி படைத்தவர் நீரே ஆவீர், நித்திய காலமும், நீர் விரும்பியவாறு செய்திடுவதற்கு ஆற்றல் படைத்தவராக இருந்திடுவீர். மேன்மையானவரும், மாண்புடைய-வரும், அடிபணியச் செய்பவரும், வல்லவரும், சர்வ வசீகரமானவரும் உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
- Bahá'u'lláh