Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே! என் பிரபுவே! நான் இளம் பிராயத்திலுள்ள ஒரு குழந்தையாவேன். உமது கருணையெனும் மார்பிலிருந்து எனக்கு உணவூட்டுவீராக. உமது அன்பெனும் நெஞ்சத்தில் என்னைப் பயிற்றுவிப்பீராக. உமது வழிகாட்டல் என்னும் பள்ளியில் எனக்குக் கல்வியளித்து, உமது அருட்கொடை எனும் நிழலில் என்னை வளர்ப்பீராக. இருளிலிருந்து என்னை விடுவிப்பீராக; என்னை ஒரு பிரகாசமிக்க ஒளியாக ஆக்குவீராக; மகிழ்ச்சியின்மையிலிருந்து என்னை விடுவிப்பீராக; ரோஜாத் தோட்டத்தின் ஒரு மலராக என்னை ஆக்கிடுவீராக; என்னை, உமது வாயிலின் ஒரு சேவகனாக அனுமதித்து, எனக்கு நேர்மையுடையோரின் தன்மையையும் இயல்பையும் வழங்குவீராக; என்னை மானிட உலகிற்கு வள்ளன்மைக்கோர் எடுத்துக்காட்டாக்கி, என் சிரசிற்கு நித்திய வாழ்வெனும் மகுடத்தைச் சூட்டுவீராக.
மெய்யாகவே, நீரே, சக்திமிக்கவர், வலிமை-மிக்கவர், கண்ணுறுபவர், செவிமடுப்பவர்.
- `Abdu'l-Bahá