Return to BahaiPrayers.net
Facebook
ஒப்பற்றப் பிரபுவே! இவ்வேழைக் குழந்தைக்கு நீர் புகலிடமாகவும் தவறிழைத்திடும் இம்மகிழ்ச்சியற்ற ஆன்மாவுக்கு நீர் இரக்கம் காட்டி மன்னித்திடும் பிரபுவாகவும் ஆவீராக. பிரபுவே! நாங்கள் பயனற்றச் செடிகளாயினும் நாங்கள் உமது ரோஜாத் தோட்டத்தினைச் சார்ந்தவர்களே! இலைகளும் மலர்களுமற்ற இளஞ்-செடிகளாயினும் நாங்கள் உமது பழத் தோட்டத்தினைச் சார்ந்தவர்களே! ஆதலின் உமது மென்கருணை என்னும் மேகங்களின் பொழிவுகளின்வழி இச்செடியினைப் பேணி வளர்த்து உமது ஆன்மீக வசந்தம் என்னும் உயிர்ப்பிக்கும் மூச்சினால் அதனைத் துரிதப்படுத்திப் புத்துணர்வுப் பெறச் செய்வீராக! கவனமுடையவனாகவும் உய்த்துணரும் ஆற்றல் உடையவனாகவும் மேன்மை மிக்கவனாகவும் அவனை ஆகச் செய்து, அதனால் அவன் நித்திய வாழ்வு பெற்று, என்றும் உமது இராஜ்யத்தில் வாழ்ந்திட அருள்புரிவீராக!
- `Abdu'l-Bahá