Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, என் கடவுளே! வாழ்வென்னும் விருட்சத்தின் சிறு கிளைகளும், இரட்சிப்பு எனும் புல்வெளியின் பறவைகளும், உமது அருள் எனும் சமுத்திரத்தின் முத்துக்களும், உமது வழிகாட்டல் எனும் பூங்காவின் ரோஜாக்களுமாக விளங்கும் இந்தக் குழந்தைகளை நீர் காண்கின்றீர்.
கடவுளே, எங்கள் பிரபுவே! நாங்கள் உமது புகழைப் பாடுகிறோம், உமது புனிதத்தன்மைக்குச் சாட்சியம் பகர்கின்றோம், எங்களை வழிகாட்டும் ஒளிகளாக ஆக்கிடவும், மனுக்குலத்தின் மத்தியில் நித்தியப் பேரொளி எனும் தொடுவானங்களின் மேல் ஒளிவீசும் விண்மீன்களாக ஆக்கிடவும், உம்மிடமிருந்து தோன்றிடும் அறிவை எங்களுக்குக் கற்பிக்கவும், உமது கருணை எனும் சுவர்க்கத்தை நோக்கிப் பேரார்வத்தோடு மன்றாடுகிறோம். யா பஹாவுல்-அப்ஹா.
- `Abdu'l-Bahá