Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே! நான் ஒரு குழந்தையாவேன்; உமது அன்புக் கருணை எனும் நிழலின் கீழ் என்னை வளரச் செய்திடுவீராக. நான் ஓர் இளஞ்செடியாவேன்; உமது வள்ளன்மை எனும் மேகங்களின் பொழிவுகள் வாயிலாக என்னை வளரச் செய்வீராக. அன்பெனும் பூங்காவில் நான் ஓர் இளந்தளிராவேன்; பயனுள்ள கனிகொடுக்கும் ஒரு மரமாக என்னை ஆக்கிடுவீராக.
வல்லவரும் சக்திமிக்கவரும் நீரே ஆவீர்; சர்வ அன்பானவரும், சர்வமும் அறிபவரும், சகலத்தையும் காண்பவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá