Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! இச்சிறுவன் உமது மென்கருணை, அன்புமிகு அருள் எனும் மார்பிலிருந்து உணவளிக்கப்-படுமாறும் அவன் உமது விண்ணுலக விருட்சங்களின் கனிகளைக் கொண்டு ஊட்டம் அளிக்கப்படுமாறும் தயை கூர்ந்து அருள்வீராக. நீரே, உமது மாட்சிமைமிகு நல்விருப்பம், சக்தி ஆகியவற்றின் ஆற்றல்வழி அவனைப் படைத்துத் தோற்றுவித்துள்ளீர் என்ற காரணத்தினால் அவனை உமது பராமரிப்பிலல்லாது வேறெவரது பராமரிப்பிலும் இருக்க விடாதீர். சர்வ வல்லவரும், சர்வஞானியுமான அவரைத் தவிர, இறைவன் வேறெவருமிலர்.
என் அதிபெரும் நேசரே, நீர் போற்றப்படுவீராக. உமது உயரிய அருள்பாலிப்பெனும் இனிய மணங்களையும் உமது புனித அருட்கொடைகள் எனும் நறுமணங்களையும் அவன்பால் வீசிட அருள்வீராக. நாமங்கள், பண்புகள் எனும் இராஜ்யத்தினை உமது பிடியில் வைத்திருப்பவரே, உமது அதிமேன்மைமிகு நாமத்தின் நிழலின்கீழ் பாதுகாப்பினைத் தேடிட அவனுக்குச் சக்தியளிப்பீராக. மெய்யாகவே, விரும்பியதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே; உண்மையிலேயே நீர் வலிமை மிக்கவர், மேன்மைப்படுத்தப்பட்டவர், என்றும் மன்னிப்பவர், கிருபையாளர், உதாரகுணம் மிகுந்தவர், கருணை மிக்கவர்.
- Bahá'u'lláh