Return to BahaiPrayers.net
Facebook
இறைவா, இச்சிசுவினை உமது அன்பெனும் நெஞ்சினில் வளர்த்து, உமது அருள்பாலிப்பு என்னும் மார்பிலிருந்து அதற்குப் பாலூட்டுவீராக. உமது அன்பு என்னும் ரோஜாத் தோட்டத்தில் இப்புதிய செடியினைப் பேணி வளர்த்து, உமது அருட்கொடை என்னும் மழைப் பொழிவின் வழி அது வளர்ந்திட உதவுவீராக. உமது இராஜ்யத்தின் ஒரு குழந்தையாக அதனை ஆகச் செய்து, உமது விண்ணுலக ஆட்சியின்பால் அதனை வழிநடத்திச் செல்வீராக. சக்தி வாய்ந்தவரும் அன்பானவரும் நீரே. வழங்குபவரும் தாராளத் தன்மையுடையவரும் நீரே. ஒப்பற்ற வள்ளன்மைமிகு பிரபுவும் நீரே.
- `Abdu'l-Bahá