Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, என் இறைவா, நீர் போற்றப் படுவீராக! துரிதமாக முன்னேறிடும் உமது அருள் என்னும் காற்றின் மூலமாகவும், உமது நோக்கத்தின் பகலூற்றானவர்களின் மூலமாகவும் உமது அகத் தூண்டலின் உதயபீடங்களானோரின் மூலமாகவும் என் மீதும் உமது வதனத்தைத் தேடினோரின் மீதும் உமது தாராளத் தன்மைக்கும் வள்ளன்மைமிகு அருளுக்கும் பொருந்தவும், உமது வழங்குகைக்கும் தயைக்கும் தகுதியானவற்றை அனுப்பி-யருளுமாறு நான் உம்மைப் பரிந்து கேட்கின்றேன். நான் வறியவனாகவும் துணையற்றவனாகவும் இருக்கின்றேன். என் பிரபுவே, உமது செல்வம் என்னும் சமுத்திரத்தில் என்னை மூழ்கச் செய்வீராக; தாகமுற்றிருக்கிறேன், உமது அன்பாதரவு என்னும் ஜீவ நீரிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக.
உமது சொந்த மெய்நிலையின் மூலமும் உமது திருவுருவின் பிரதிநிதியாக நீர் நியமித்துள்ள அவதாரத்தின் மூலமும் விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் அனைவருக்குமான உமது தனிச் சிறப்பார்ந்த திருவாக்கின் மூலமும் உமது அருள்மிகு கடாட்சம் என்னும் விருட்சத்தின் நிழலின்கீழ் உமது ஊழியர்களை ஒன்று திரட்டுமாறு நான் உம்மை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, அதன் கனிகளை உட்கொள்ளவும் அதன் இலைகளின் சலசலப்பையும் அதன் கிளைகளின் மீதமர்ந்து கீதம் பாடிடும் அப் பறவையின் குரலின் இனிமையையும் செவிமடுத்திட அவர்களுக்கு உதவிடுவீராக. நீர், மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவர், அடைந்திடவியலாதவர், எல்லாம் வல்லவர், அதி வள்ளன்மை வாய்ந்தவர்.
- Bahá'u'lláh