Return to BahaiPrayers.net
Facebook
கருணைமிக்க இறைவா! வலிமையும் சக்தியும் மிக்கவரே! அதியன்புமிக்கத் தந்தையே!
உமது மேன்மைமிக்க உறுதிப்பாட்டிலிருந்து உமது முடிவிலா அருட்கொடைகளை விரும்பி உமது வாயிலில் இறைஞ்சியவர்களாக, உந்தன்பால் திரும்பிய வண்ணம் உமது இவ்வூழியர்கள் ஒன்று கூடியுள்ளனர். உமது நல்விருப்பத்தைத் தவிர அவர்களுக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது. மனித இனத்திற்குச் சேவை புரிவதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த எண்ணமுமே இல்லை.
இறைவா! இக்கூட்டத்தினை ஒளிபெறச் செய்வீராக. உள்ளங்களைக் கருணை மிக்கதாய் ஆக்குவீராக. அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் அருட் கொடைகளை வழங்கிடுவீராக. விண்ணுலகினின்று வந்திடும் சக்தியினை அவர்களுக்கு வழங்குவீராக. அவர்களுக்குத் தெய்வீக உள்ளங்களை வழங்கி ஆசீர்வதிப்பீராக. அவர்களின் மனத் தூய்மையை அதிகரிப்பீராக; அதனால், அவர்கள் பணிவுடனும் செய்த தவறுக்கு ஆழ்ந்த வருத்தத்துடனும் உமது இராஜ்யத்தின்பால் திரும்பி மானிட உலகிற்குச் சேவையில் ஈடுபடக்கூடும். ஒவ்வொருவரும் ஒரு பிரகாசமான மெழுகுவர்த்தியாகட்டும். ஒவ்வொருவரும் ஓர் ஒளிர்ந்திடும் நட்சத்திரமாகட்டும். ஒவ்வொருவரும் வண்ணத்தில் அழகாகவும் இறைவனின் இராஜ்யந்தனில் நறுமணம் மிக்கவராகவும் ஆகட்டும்.
அன்புள்ள தந்தையே! உமது ஆசியை நல்குவீராக. எங்களின் குறைகளைப் பொருட்படுத்தாதீர். எங்களை உமது பாதுகாப்பில் அரவணைப்பீராக. எங்களின் பாவங்களை நினைவு கூர்ந்திடாதீர். உமது கருணையின் வாயிலாக எங்களைக் குணப்படுத்துவீராக. நாங்கள் நோயுற்றவர்கள்; நீர் வலிமை வாய்ந்தவர். நாங்கள் ஏழைகள்; நீர் செல்வந்தர். நாங்கள் நோயாளிகள்; நீரே மருத்துவர். நாங்கள் தேவை நிறைந்தவர்கள்; நீர் அதி தாராளத் தன்மையுடையவர்.
இறைவா! எங்களுக்கு உமது கடாட்சத்தினை வழங்கிடுவீராக. சக்தி மிக்கவர் நீரே. வழங்குபவர் நீரே. நலமளிப்பவர் நீரே!
- `Abdu'l-Bahá