Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே! என் கடவுளே! மெய்யாகவே, இவ்வூழியர்கள் உமது கருணை என்னும் இராஜ்யத்தினைப் பூஜித்தவர்களாக உந்தன்பால் திரும்பியுள்ளனர்.
மெய்யாகவே, உமது அற்புதமிகு இராஜ்யத்திலிருந்து உறுதிப்பாட்டினை நாடியும் உமது திவ்விய இராஜ்யத்தினை அடைந்திடும் நம்பிக்கைக் கொண்டும் அவர்கள் உமது புனிதத் தன்மையினால் ஈர்க்கப்பட்டு உமது அன்பு என்னும் தீயினால் சுடர்விட்டு ஒளிர்கின்றனர். மெய்யாகவே அவர்கள் மெய்ம்மைக் கதிரவனிடமிருந்து பிரகாசத்தினை விரும்பியவர்களாக உமது கடாட்சத்தின் பொழிவினை ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றனர். பிரபுவே! அவர்களைப் பிரகாசமிகு ஒளிவிளக்குகளாக, இரக்கமிகு அடையாளங்களாக, கனி கொடுக்கும் மரங்களாக, ஒளிமிக்க விண்மீன்களாக, ஆக்கிடுவீராக. உமது அன்பு என்னும் பிணைப்புகளாலும் பந்தத்தினாலும் இணைக்கப்பட்டு, உமது தயை என்னும் ஒளி விளக்குகளை ஆவலுடன் விரும்பியவர்களாக அவர்கள் உமது சேவைக்காக முன்னெழுவராக. பிரபுவே! அவர்களை வழிகாட்டலின் அடையாளங்களாக, உமது அழிவில்லா இராஜ்யத்தின் விருதுக்கொடிகளாக, உமது கருணை என்னும் கடலின் அலைகளாக, உமது மாட்சிமை என்னும் ஒளியின் கண்ணாடிகளாக, ஆக்கிடுவீராக.
மெய்யாகவே, தாராளத் தன்மையுடையவர் நீரே! மெய்யாகவே கருணைமிக்கவர் நீரே. மெய்யாகவே நீரே மதிப்புமிக்கவர், அன்புக்குரியவர்!
- `Abdu'l-Bahá